பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்து முடித்து இருக்கும் ராதிகா ஆப்தேவின் நடிப்பில், சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான த்ரில்லர் படம் போபியா. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, அதுமட்டுமல்ல படத்தில் ராதிகா ஆப்தேவ்வின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மதுர் பண்டர்கரின் படத்தில் ராதிகா ஆப்தே நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுர் பண்டர்கர், இந்தியாவில் எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'மெயின் இந்து' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். போபியா படத்தில் ராதிகாவின் நடிப்பை பார்த்து வியந்துபோன மதுர், இப்போது தனது படத்தில் ராதிகாவை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவரிடம் பேசி வருவதாக தெரிகிறது.