ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிக்க விக்ரம் குமார் இயக்கத்தில் இம்மாதம் 6ம் தேதி வெளிவந்த படம் '24'. படம் பற்றி இரு விதமான கருத்துக்கள் வெளிவந்த சூழ்நிலையில் படம் தெலுங்கில் குறிப்பிடத்தக்க வெற்றியையும், தமிழில் சுமாரான வெற்றியையும் பெற்றதாகவே கோலிவுட்டில் கூறி வருகிறார்கள். ஆனாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் '24' படக்குழுவினர் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து தங்களது வெற்றியைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
இது குறித்த புகைப்படம் ஒன்றையும் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் கொண்டாட்டத்தில் ரகுமான் வந்து கலந்து கொண்டதற்கு சூர்யாவும் நன்றி தெரிவித்துள்ளார்.
“நீங்கள் வந்து கலந்து கொண்டதற்கு நாங்கள் அதிகமாக மகிழ்ச்சியடைந்துள்ளோம். உங்களது பொன்னான நேரத்தை எங்களுடன் செலவிட்டதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது,” என சூர்யா தெரிவித்துள்ளார்.
மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் மட்டும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.