கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
சிங்கப்பூர் அரசின் ஒரு அங்கமான மீடியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி அமைப்பு தமிழ் படத் தயாரிப்பில் இறங்கி உள்ளது. சிங்கப்பூரில் உள்ள காம்பேக் பிலிம் இண்டியா லிமிடட் என்ற நிறுவனத்தடன் இணைந்து 'சென்னை 2 சிங்கப்பூர்' என்ற படத்தை தயாரித்துள்ளது. சிங்கப்பூர் சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ் படத் தயாரிப்பில் இறங்கி உள்ளது.
'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தில் கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அப்பாஸ் அக்பர் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞன் ஒரு படம் இயக்க விரும்புகிறான். இதற்கான ஸ்கிரிப்டோடு தயாரிப்பாளர் தேடுகிறான். ஒரு தயாரிப்பாளர் அவன் கதையை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் இளைஞன் தயாரிப்பாளரை அடித்து விட்டு சிங்கப்பூருக்கு வந்து விடுகிறான். தான் எழுதிய அதே கதையை இங்கு எப்படி சினிமாவாக எடுக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
சிங்கப்பூரின் பெருமைகள், சிங்கப்பூருக்கும் தமிழ் மக்களுக்கு இருக்கும் நல்லுறவு படத்தில் பிரதான இடம்பிடிக்கும். படத்தின் கதையை கேட்டு சிங்கப்பூர் அரசுக்கு பிடித்து விடவே எங்களுடன் இணைந்து தயாரிக்க முன்வந்தது. படப்பிடிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தது என்றார்.