இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டில் உள்ள அறிவுஜீவி நடிகைகளில் நந்திதாதாசும் ஒருவர். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்ப்பறவை படங்களில் நடித்தார். அவர் லெஸ்பியனாக நடித்த 'பயர்' படம் சென்சாரில் சிக்கி கடும் போராட்டத்துக்கு பிறகுதான் வெளிவந்துதது. இந்த நிலையில் அவர் “சினிமாவுக்கு தணிக்கை குழுவே தேவையில்லை. எது நல்ல படம், எது கெட்ட படம் என்று மக்களே தீர்மானிக்கட்டும் என்ற பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு படத்தை கஷ்டப்பட்டு எடுத்துவிட்டு அதற்கு தணிக்கை சான்றிதழ் வாங்க அதைவிட கஷ்டப்பட வேண்டியது இருக்கிறது. உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்க்கும் படத்தை 5 பேர் நல்ல படம், கெட்ட படம் என்று தீர்மானிப்பது எப்படி சரியாகும். எனக்கு பிடிக்கும் படம் இன்னொருவருக்கு பிடிக்காது. இன்னொருவருக்கு பிடிக்கும் படம் எனக்கு பிடிக்காது விருப்பங்கள் மாறுபடும். எனவே ஒரு படம் நல்ல படமா, கெட்ட படமா என்கிற முடிவை மக்களிடமே விட வேண்டும். நல்ல படம் என்றால் ஆதரிப்பாளர்கள். கெட்ட படங்கள் என்றால் புறக்கணிப்பார்கள்.
தணிக்கு குழு கெட்ட படங்களை தடுத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் பிறகு எப்படி வன்முறை படங்களும், பெண்களை அசிங்கப்படுத்தும் படங்களும் வெளிவருகிறது. அதனை தணிக்கை குழு எவ்வாறு அனுமதித்தது. எனவே தணிக்கை குழு தேவையில்லை எந்த படத்தை பார்ப்பது, எதை தவிர்ப்பது என்பதை மக்களே முடிவு செய்யட்டும் தணிக்கை குழு சொல்லித்தர வேண்டியதில்லை. இவ்வாறு நந்திதாதாஸ் கூறியுள்ளார்.