இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தால் ஆரம்பிக்கப்பட்ட 'வேந்தர் மூவீஸ்' என்ற பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன். வேந்தர் மூவீஸ் தயாரித்த 'புலிப்பார்வை' என்ற படத்தில் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் வேடத்திலும் நடித்தார். எஸ்.ஆர்.எம்.கல்வி குழுமத்திற்கும் மதனிற்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதன் “நான் காசிக்கு சென்று கங்கையில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதிவைத்து விட்டு மாயமாகி விட்டார்.
அவரது தலைமறைவும், கடிதமும், திரையுலகிலும், கல்வி உலகிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் மதனின் நெருங்கிய நண்பர்களான தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா, நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் மதனின் மனைவிகள் சிந்து மற்றும் சுமலதா ஆகியோர் மதனை தேடிக் கண்டுபிடிக்க காசிக்கு விரைந்துள்ளனர். காசி மாநகர போலீசில் முறைப்படி புகார் அளித்து விட்டு அங்கு மதனின் போட்டோவை உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள், பணியாளர்களிடம் கொடுத்து மதனை தேடி வருகிறார்கள். காசி வாழ் தமிழர்கள் இவர்களுக்கு உதவி வருகிறார்கள்.
மற்றவர்களை திசை திருப்பவே மதன் காசி செல்வதாக கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், அவர் சென்னையில் தன் நண்பர்கள் வீட்டிலோ, அல்லது உறவினர்கள் வீட்டிலோ தங்கியிருக்கலாம் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. மதன் வெளி உலகத்துக்கு வரும்போது பல உண்மைகள் வெளிவரலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிப்பதாக இருந்த படத்தை மதன் தயாரிக்க இருந்தார். இதனால் பல விநியோகஸ்தர்கள் அவரிடம் முன்பணம் கொடுத்திருந்தனர். அவர்கள் இப்போது சென்னைக்கு படையெடுத்து வந்துள்ளனர். இதனால் திரையுலகில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.