தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆல் இஸ் வெல் படத்தின் தோல்விக்கு பிறகு அபிஷேக் பச்சன் நடிப்பில் வௌியாக உள்ள படம் 'ஹவுஸ்புல்-3'. ஹவுஸ்புல் படங்களின் மூன்றாவது பாகமாக வௌிவர இருக்கும் இப்படத்தில் அக்ஷ்ய் உடன் ரித்தேஷ் தேஷ்முக், அக்ஷ்ய் குமார் ஆகியோரும் முதன்மை ரோலில் நடித்துள்ளார்கள். இப்படம் இந்தவாரம் ஜூன் 3ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் அபிஷேக் பச்சன் என்ன சொல்கிறார் என்று இனி கேட்போம்....
ஒரு படத்தின் தொடர்ச்சியில் நடிக்கும் போது உங்களின் மனநிலை எப்படியிருந்தது.?
இயக்குநர் சாஜித் பர்கத் இப்படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது உடனடியாக நான் ஓ.கே., சொன்னேன். ஆனால் அந்தப்படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க தொடங்கியதும் ஒருபடத்தின் தொடர்ச்சியில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை புரிந்து கொண்டேன். ஹவுஸ்புல், ஹவுஸ்புல்-2 படங்களுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ஆகையால் இந்தப்படத்தில் என்னுடைய பெஸ்ட்டை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன், அதை கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
ஹவுஸ்புல்-3 எந்த மாதிரியான படம்.?
நான் ஏற்கனவே 'போல் பச்சன்' என்ற படத்தில் காமெடி ரோலில் நடித்திருக்கிறேன். ஹவுஸ்புல்-3 படத்தில் எனது ரோல் ரொம்பவே வித்தியாசமானது. இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடியாக உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் படத்தில் காமெடி வௌிப்படும். ஹவுஸ்புல், ஹவுஸ்புல்-2 படம் போன்று ஹவுஸ்புல்-3 படத்திற்கும் ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகும் என்று நம்புகிறேன்.
படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க.?
இந்தப்படத்தில் எனது கேரக்டர் பெயர் பன்ட்டி, நான் ஒரு ராப் பாடகர். எப்படிப்பட்ட பிரச்னையையும் என்னால் தீர்க்க முடியும். ஆனால் அதேசமயம் வீட்டிற்குள் வந்துவிட்டால் நான் அமைதியாகிவிடுவேன். படத்தில் எனது கேரக்டரை நான் மிகவும் ரசித்து நடித்தேன்.
அக்ஷ்ய், ரித்தேஷ் உடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
ரித்தேஷ் தேஷ்முக் எனது சிறிய சகோதரர் போன்றவர். ஏற்கனவே ரித்தேஷ் உடன் நான் நடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கு பிறகு நான் மீண்டும் ஹவுஸ்புல்-3 படம் மூலம் ரித்தேஷ் உடன் இணைந்துள்ளேன். அப்போது பார்த்த ரித்தேஷ்க்கும் இப்போதுள்ள ரித்தேஷ்க்கும் நிறைய மாற்றம். இப்போது அவர் நடிப்பில் நிறைய திறமையும், வளர்ச்சியும் தெரிகிறது. அதுமட்டுமல்ல அவரின் தன்னம்பிக்கையும் உயர்ந்துள்ளது. அவர் ஒரு சிறந்த காமெடியனும் கூட, அவருடன் நடித்தது மகிழ்ச்சி. அக்ஷ்யைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் என்னுடைய மூத்த சகோதரர் போன்றவர். ஒழுக்கமான நடிகர், தன்னுடைய வேலைகளை சரியாக செய்பவர். தினமும் ஜிம், ஷூட்டிங், ஷூட்டிங் முடிந்ததும் வீடு என்று தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பார். இருவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
காமெடி செய்வது கஷ்டமா.?, சுலபமா.?
ரொமான்ஸ், ஆக்ஷ்ன் இரண்டும் உணர்வு சம்பந்தப்பட்டது. அதை நாம் கொண்டு வர முடியும். ஆனால் காமெடி அப்படியல்ல, நாம் காமெடி செய்ய வேண்டுமானால் நம்மை சுற்றியிருப்பவர்களும் காமெடி செய்ய ஏற்ற சூழ்நிலையை நமக்கு ஏற்படுத்தி தர வேண்டும். அக்ஷ்ய், ரித்தேஷ் இருவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். அவர்களை போன்று போமன் இரானி, ஜானி லிவர், சங்கி பாண்டே போன்றவர்களும் உறுதுணையாக இருந்தார்கள்.
ஸ்டார் நடிகர்களின் வாரிசு என்றால் வெற்றி சுலபமா.?
இல்லை, இது தவறான கண்ணோட்டம். ஸ்டார் நடிகர்களின் வாரிசு என்றாலும் அவர்களுக்கு திறமையிருந்தால் தான் ஜெயிக்க முடியும். ஸ்டார் நடிகர்களின் வாரிசு மட்டுமல்ல, அவர்கள் அல்லாத மற்ற நடிகர்களுக்கும் கூட திறமை இருந்தால் தான் வெற்றி பெற முடியும். பிளாப் கொடுத்தால் அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான். இன்றைக்கு என்னை பாருங்கள், பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் உள்ளேன். யாரும் தோல்வி படத்தை கொடுக்க வேண்டும் என்று நடிப்பதில்லை. ஒவ்வொரு நடிகர்களும் வெற்றி பெற கடுமையாகத்தான் உழைக்கிறார்கள், அதில் சிலருக்கு வெற்றி கிடைக்கிறது, சிலருக்கு தோல்வி கிடைக்கிறது.
இவ்வாறு அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.