இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷ்ய் குமார், தற்போது ஷங்கரின் இயக்கத்தில், ரஜினியுடன் '2O' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அக்ஷ்ய் குமார் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் என்ற பெருமையோடு '2O' உருவாகி வருகிறது. இதனிடையே '2O' படத்தில் தான் எதற்காக நடிக்கிறேன் என்று அக்ஷ்ய் குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... '2O' படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமே ரஜினியின் கையால் அடிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான். இதை என் வாழ்க்கையின் மைல்கல்லாக பார்க்கிறேன். மேலும் இப்படத்தில் நான் சூப்பர் ஹீரோகவும் நடிக்கிறேன், அதுவும் சூப்பர் ஹீரோ வில்லனாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
'2O' படம் 2017ம் ஆண்டு மத்தியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.