இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமானார் சித்தார்த். அந்தப் படம் தோல்வி அடைந்ததால் அடுத்த வாய்ப்பு பெரிதாக சித்தார்த்துக்கு அமையவில்லை. இதனால் தெலுங்கிற்கு சென்றவர் அங்கு பெரிய அளவில் வெற்றி பெற்றார். தமிழ் நடிகர் என்கிற இமேஜ் மாறி தெலுங்கு நடிகராகவே மாறிவிட்டார். ஒரு சில இந்திப் படங்களிலும் நடித்தார். என்றாலும் சொந்த மொழியான தமிழில் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் இருந்தார்.
'180' என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதுவும் சரியாக அமையவில்லை. 'காதலில் சொதப்புவது எப்படி?' அவருக்கு கை கொடுத்தது. 'உதயம் என்எச் 4'ம், தீயா வேலை செய்யணும் குமாரும், 'ஜிகிர்தண்டா'வும் கை தூக்கிவிட்டது. அவர் நினைத்த இடத்தை பிடித்தார். ஆனால் அதன் பிறகு வெளிவந்த 'காவித்தலைவன்', 'எனக்குள் ஒருவன்', 'ஜில் ஜங் ஜக்' படங்கள் சறுக்கியது. அடுத்து தமிழில் ஒரு ஹிட் படம் கொடுத்தே ஆகவேண்டும் என்பது அவரது நிலை. இதற்காக நல்ல கதை தேடிக் கொண்டிருக்கும் நிலையில் முதன் முறையாக மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கிறார்.
ஏற்கெனவே 'உஸ்தாக் ஓட்டல்' படத்தில் அவர் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழ்நிலையில் நடிக்க முடியவில்லை. தற்போது 'கம்மரசம்பவம்' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் கால் பதிக்கிறார். இது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் இன்னொரு ஹீரோவாக திலீப் நடிக்கிறார். திலீப் சித்தார்த் இருவருக்கும் சமமான வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.