‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிலிம்பேர் பத்திரிக்கை ஆண்டு தோறும் தென்னிந்திய மற்றும் வட இந்திய சினிமா கலைஞர்களுக்கு தனித்தனியாக ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கிறது. 2015ம் ஆண்டு வெளிவந்த படங்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கான 63வது விருது வழங்கும் விழா வருகிற ஜூன் 18ந் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.
இண்டர்நேஷனல் கன்வென்சன் செண்டரில் நடக்கும் இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களுக்கு தனித்தனியாக விருது வழங்கப்படுகிறது. இதில் 4 மொழியைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். விழாவையொட்டி நடிகர், நடிகைகளின் பிரமாண்ட நடன நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவை நடிகர் அரவிந்த்சாமி தொகுத்து வழங்குகிறார்.
இதனை பிலிம்பேர் ஆசிரியர் ஜித்தேஷ், மெயின் ஸ்பான்சரான பிரிட்டாணியா நிறுவன அதிகாரி வினய் சுப்பிரமணியம், நடிகர் அரவிந்த்சாமி ஆகியோர் சென்னையில் அறிவித்தனர்.
அரவிந்த்சாமி பேசும்போது... “1999 முதல் சினிமாவை விட்டு விலகி இருந்தேன். அந்த காலக்கட்டத்தில் சினிமா பார்ப்பது கூட கிடையாது. 2007ம் ஆண்டு பிலிம்பேர் விருதுக்கான நடுவராக இருந்தேன். அப்போது குறுகிய காலத்தில் நிறைய படங்கள் பார்த்தேன். அதுதான் என்னை மீண்டும் நடிக்கத் தூண்டியது. இப்போது நல்ல கதைகள் கேட்டு அவற்றுக்கு உதவ வேண்டும் என்பதற்காக நடிக்கிறேன் என்றார்.