தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு ஊருக்குள் ஹீரோ நுழையும்போது அந்த ஊர் பெயர் பலகையை காட்டுவார்கள். இப்போது டாப் ஆங்கிளில் அந்த ஊரையே காட்டுகிறார்கள். ரோட்டில் கார் சேசிங் நடந்தால் ஏதாவது ஒரு உயரமான கட்டிடத்தின் மீது ஏறி அதனை படம்பிடிப்பார்கள். இப்போது ஆகாயத்திலிருந்து படம்பிடிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ஹெலிகேம்.
ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட இந்த கேமரா இந்தியாவுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவை சிறிய ரகம். அதிலேயே கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமராவில்தான் படம்பிடிக்க முடியும். அது சற்று தரம் குறைவானதாக இருக்கும். 100 அடி உயரம் வரை பறக்கும். இந்த வகை கேமராவை நடிகர் பாண்டியராஜன் மகன், ஒய்.ஜி.மகேந்திரன் உறவினர் ஒருவர் இப்படி சிலர் வைத்துக் கொண்டு வாடகைக்கு விடுகிறார்கள். பிரமாண்ட நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளில் கூட இதனை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
தற்போது சினிமாவுக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஹெலிகேம் வந்திருக்கிறது. பெயர் 'ஆல்டா 8'. தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக இருக்கும் அரவிந்தன். உலக கேமரா தொழில்நுட்ப வசதிகளை இந்தியாவுக்கு கொண்டு வரும் நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் அவர் ஹாலிவுட்டில் இருந்து கொண்டு வந்திருக்கும் கேமரா இது.
சுமார் 20 கிலோ எடை கொண்ட இந்த கேமராவை தனித்தனியாக பிரித்து பார்சல் பண்ணி எடுத்துக் கொண்டு போகலாம். இதன்கென்று தனி கேமரா கிடையாது. எந்த கேமராவையும் பொருத்திக் கொள்ளலாம். ஹெலிகாப்டருக்கு மேலேயும் பொருத்தலாம், கீழேயும் பொருத்தலாம். 360 டிகிரியிலும் சுழலக்கூடியது. இப்படி பல நவீன வசதி கொண்டது. 10 லட்சத்திலிருந்து இதன் விலை தொடங்குகிறது. அதன்பிறகு இணைக்கிற வசதிகளுக்கேற்ப விலை இருக்கும். நாள் வாடகைக்கும் கிடைக்கும். இதனை இயக்க தனி பயிற்சி தேவை. பயிற்சி பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஜூன் மாதம் முதல் இந்த கேமரா பணிக்கு கொண்டுவரப்படுகிறது. இனி சினிமாவில் தமிழ்நாட்டை ஆகாயத்திலிருந்து ரசிக்கலாம்.