இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
செல்வராகவனின் மயக்கம் என்ன படத்தில் நடித்த பூஜா திவாரியாவின் கையில் தற்போது இறைவி, குற்றமும் தண்டனையும், ஆண்டவன் கட்டளை உள்பட அரை டஜன் படங்கள். இந்த படங்களில் அவர் முக்கிய நாயகியாக நடிக்கவில்லை என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருவதாக சொல்கிறார். அதில் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் தனக்கு வெயிட்டான வேடம் என்கிறார் பூஜா திவாரியா.
அதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால், நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்க வில்லை. அதனால் கிடைத்த வேடங்களில் தற்போது நடித்து வருகிறேன். இதில இறைவி படத்தில் அஞ்சலி, கமாலினி முகர்ஜி ஆகியோர் இருந்தபோதும் எனக்கும் முக்கியமான வேடம் கிடைத்துள்ளது. அதனால் வருகிற ஜூன் 3-ந் தேதி வெளியாகும் இந்த படம் எனக்கு நல்லதொரு ரீச்சை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார்.
மேலும், இந்த இறைவி படத்தில் நடித்தபோது நான் ஒரு புதுமுக நடிகை போன்று டச்சப் பாய்கூட இல்லாமல்தான் சென்றேன். ஆனால், அப்படத்தில் நடித்த விஜயசேதுபதி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட அனைவருமே தங்களது டச்சப்பாய் மற்றும் உதவியாளர்களை எனக்கும் டச்சப் மற்றும் தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அதனால் இறைவி படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்கிறார் பூஜா திவாரியா.