தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருமணத்துக்குப்பின் அமலாபால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டரே தவிர சுத்தமாக நிறுத்திவிடவில்லை. கடந்த வருடம் தமிழில் 'பசங்க-2' படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த அமலாபால் தற்போது மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடிக்கும் 'ஷாஜகானும் பாரிக்குட்டியும்' மற்றும் 'ஒரேமுகம்' ஆகிய இரு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தார்.. இதில் 'ஒரேமுகம்' படத்தில் அமலாபாலுக்கு பவர்புல்லான சேனல் ரிப்போர்ட்டர் வேடம் கொடுக்கப்பட்டு இருந்தது.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு தேதிகளும் ஒன்றை ஒன்று குறுக்கிட்டதால் அமலாபால் 'ஒரே முகம்' படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.
இப்போது அமலாபாலுக்கு பதிலாக நடிகை ஜூவல் மேரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இந்த ஜூவல்மேரிதான் மம்முட்டியுடன் 'உட்டோப்பியாயிலே ராஜாவு' மற்றும் 'பத்தேமாறி' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர். தற்போது தொடுபுழாவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் 'ஒரேமுகம்' படத்தில் ஜூவல் மேரி ஏற்று நடித்துவரும் கதாபாத்திரத்தின் பெயரும் அமலாதான் என்பது இன்னொரு ஆச்சர்யம்.. இந்தப்படத்தில் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் ஹீரோவாக நடிக்க முக்கிய கதாநாயகியாக 'பிசாசு' புகழ் பிரயாகா நடிக்கிறார்.