பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கடந்த வருடம் இதே தேதியில் தான் (மே-29) மலையாள சினிமாவில் எவர்கிரீன் சூப்பர்ஹிட் படமாக மாறிய 'பிரேமம்' படம் வெளியானது.. இந்தப்படம் வெளியான தினத்தன்று படத்தின் ஹீரோவான நிவின்பாலி டென்சனில் நகத்தை கடித்தபடி இருந்ததாக கேள்வி.. படம் ஹிட்டாகும் என்பதுதான் பார்த்தவுடனே தெரிந்துவிட்டதே, அப்புறம் ஏன் அவர் டென்சன் ஆனார் என்றால் அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அதே தினம் தான் நிவின்பாலி நடித்த இன்னொரு படமான 'இவிடே' என்கிற படமும் வெளியாகி இருந்தது. இதில் நிவின்பாலியுடன் பிருத்விராஜும் நடித்திருந்தார்..
அதனால் படம் வெளியாவதற்கு முன்பிருந்தே மல்டிஸ்டாரர் படமான 'இவிடே' தான் மிகப்பெரிய சக்சஸ் ஆகும் என்றும் 'பிரேமம்' ஹிட்டானாலும் 'இவிடே' அளவுக்கு ஆவது சந்தேகம் தான் என்றும் சொல்லி வந்தனர். பிருத்விராஜுக்கு ஒரு படம் என்பதால் அவர் சாதாரணமாகவே இதை எடுத்துக்கொண்டார். ஆனால் முதன்முறையாக தனது இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி, சந்தர்ப்ப சூழலால் இரண்டு படங்களின் ரிசல்ட்டும் நெகடிவ்வாக அமைந்துவிட்டால் என்ன ஆவது என்கிற நியாயமான பயம் நிவின்பாலிக்கு ஏற்பட்டிருந்தது..
காரணம் அப்போதுதான் கொஞ்ச கொஞ்சமாக தனது இடத்தை மலையாள சினிமாவில் ஸ்திரப்படுத்தி வைத்துக்கொண்டே வந்தார் நிவின்பாலி.. ஆனால் விதியோ, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'இவிடே'க்கு பிளாப் பட்டத்தை சூட்டின.. ஒரே வாரத்தில் அந்தப்படம் தியேட்டர்களில் இருந்த தூக்கப்பட 'பிரேமம்' படமோ 300 நாட்கள் தாண்டி ஓடி பல சாதனைகளை படைத்ததோடு மலையாள சினிமாவின் அதிக வசூல் பட பட்டியலில் 'த்ரிஷய்ம்' படத்துக்கு அடுத்த இடத்தை பிடித்தது.. இளம் நாயகர்களில் நிவின்பாலியை முன்னணி நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஆக்கியது..