பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு பிளாஸ்பேக்கை பார்த்துவிட்டு அதன்பின் விஷயத்துக்கு வருவதுதான் சரியாக இருக்கும்.. கடந்த வருடம் ஜூன் மாதம் திடீரென ஒருநாள் இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன், தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகர் ஜெயராமை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.. முதலில் சாடைமாடையாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டவர், பின்னர் அதுபற்றி மீடியா ஆட்கள் கேட்டபோது ஜெயராமைத்தான் சொன்னேன் என ஒப்புக்கொள்ளவும் செய்தார். இந்தப்பிரச்சனை உருவெடுக்க காரணம், ஜெயராம் தனது மகன் காளிதாஸை முதலில் பிரதாப் போத்தன் டைரக்சனில் அறிமுகப்படுத்துவதாக சொல்லிவிட்டு, பின்னர் அதிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் பின் வாங்கியதுதானாம்.
ஆனால் பிரதாப் போத்தன் அவ்வளவு விமர்சித்தும் கூட உடனடியாக ஜெயராம் அதற்கு பதிலடி தரவில்லை.. அதன்பின் ஜூலை மாதம் வேறு வழியின்றி நடிகர்சங்கத்தில் புகார் கொடுத்தார்.. அதன்பின் என்ன ஆனதோ தெரியவில்லை இருவரும் ஓருவரைப்பற்றி ஒருவர் பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள்.. இப்போது நடப்பு விஷயத்துக்கு வருவோம்.. நேற்று ஜெயராம் மகன் காளிதாஸ், பிரபுவுடன் இணைந்து நடித்துள்ள 'மீன்குழம்பும் மண்பானையும்' படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றதல்லவா..?
இந்த விழாவில் ஜெயராம், பிரதாப் போத்தன் இருவருமே கலந்துகொண்டதுதான் அதிசயம்.. ஜெயராம் தனது மகன் படம் என்பதால் வந்திருந்தார். பிரதாப் போத்தனோ அன்னை இல்லத்து செல்லப்பிள்ளை.. பிரபுவுக்கு ஆருயிர் நண்பன்.. அந்த நட்பின் அடிப்படையில் அவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு விழாவுக்கு வந்ததாக தெரிகிறது.. ஆனால் விழாவில் பிரதாப் போத்தனும் ஜெயராமும் அருகில் அமர்ந்ததாகவோ, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதாகவோ எந்த நிகழ்வும் நடக்கவில்லை.. ஆக பனிப்போர் இன்னும் உள்ளுக்குள் இருக்கவே செய்கிறது போலும்.