ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அல்லு அர்ஜூன் நடித்த 'சரிதோடு' படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படமும் வெற்றி பெறும்போது அல்லு அர்ஜூன் விஜயநகர மாவட்டம் சிம்மாசலத்தில் உள்ள வராக லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்ற வழிபடுவது வழக்கம். அந்த வகையில் சரிதோடு வெற்றியை தொடர்ந்து நேற்று கோவிலுக்குச் சென்றார்.
அது ஒரு மலைக்கோவில் மேலே செல்ல படிக்கட்டுகளும் உண்டு, லிப்ட் வசதியும் உண்டு. வழக்கமாக அல்லு படிக்கட்டு வழியாகத்தான் செல்வார். ஆனால் இந்த முறை அல்ல அர்ஜுன் வருவதை அறிந்து கொண்ட அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கோவில் முன் திரண்டு விட்டனர். இதனால் அல்லு அர்ஜூன் படிக்கட்டை தவிர்த்து லிப்டில் ஏறினார். அவருடன் ஏராளமான ரசிகர்களும் லிப்டில் ஏறியதால். லிப்ட் பாரம் தாங்காமல் பாதி வழியில் நின்று விட்டது. கதவும் திறக்காததால் அல்லு 10 நிமிடம் வரை லிப்டிற்குள் மாட்டிக் கொண்டார்.
அதன்பிறகு கோவில் ஊழியர்கள் வந்து கதவை உடைத்து அல்லு அர்ஜூனை மீட்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய அல்லு அர்ஜூன் கோவில் நிர்வாக அதிகாரியை சந்தித்து “எனது ரசிகர்களால்தான் லிப்ட் பழுதானது. அதை சரி செய்யும் செலவை நானே தந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.