இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ப்ரியா மணி, கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். 2007ம் ஆண்டு இவர் நடித்த பருத்திவீரன் படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுத் தந்தது. 2012ம் ஆண்டிற்கு பிறகு தமிழில் போதிய பட வாய்ப்புக்கள் இல்லாததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். இவர் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை தனது திருமணம் பற்றி எதுவும் வாய்திறக்காமல் இருந்த ப்ரியாமணி, தனக்கு மே 27ம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முஸ்தபா ராஜ் என்பவருடன் தனக்கு மே 27 அன்று நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், தனது வீட்டில் நடந்த நிச்சயதார்த்தத்திற்கு தனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது நிச்சயதார்த்த போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.