'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கௌதமிபுத்ர சாதர்கனி எனும் வரலாற்று படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா அண்மையில் அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பினார். பாலகிருஷ்ணாவின் 100வது படமான இப்படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்குகின்றார். முன்னாள் பாலிவுட் கனவு கன்னி ஹேமமாலினி இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக நடிக்கின்றார். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னர் இப்படத்தின் நாயகியை இன்னும் படக்குழு தேர்வு செய்யவில்லை.
அனுஷ்கா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டனராம். தற்போது நடிகை ஸ்ரேயா இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறபடுகின்றது. படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஸ்ரேயா சமீபத்தில் நாகார்ஜுனா, கார்த்தி நடித்த ஊபிரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இப்படத்தில் ஸ்ரேயா நடிப்பது உறுதி செய்யப்பட்டால் திரை உலகில் அவரது இரண்டாவது சுற்றிற்கு இப்படம் நல்ல திருப்புமுனையாக அமையும்.