ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஏர்லிப்ட் படத்தை தொடர்ந்து அக்ஷ்ய் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ஹவுஸ்புல்-3. ஹவுஸ்புல் படங்களின் வரிசையில் 3வது பாகமாக இப்படம் வெளிவருகிறது. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அக்ஷ்ய். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு இன்னும் சினிமாவில் திருப்தி ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
இதுப்பற்றி அக்ஷ்ய் மேலும் கூறியிருப்பதாவது... சினிமாவில் நான் திருப்தி அடைந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. நான் பேராசைக்காரன். இன்னும் நான் கடினமாக உழைப்பேன். இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பேன். ரசிகர்களுக்கு எப்போது எனது நடிப்பு சலிப்பை தட்டுகிறதோ அப்போது இந்த நடிப்பை விட்டு விலகுவது குறித்து யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.