ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சரப்ஜித். பாகிஸ்தான் சிறையில் நீண்டகாலம் சித்தரவதைப்பட்டு அங்கு நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட இந்தியரான சரப்ஜித்சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் வெளிவந்தது. இதில் சரப்ஜித்தாக ரன்தீப்பும், அவரின் சகோதரியான தல்பீர் ரோலில் ஐஸ்வர்யாவும் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை குவிக்கவில்லை.
இதுப்பற்றி ஐஸ்வர்யா ராய் கூறியிருப்பதாவது... ''ஒரு படத்தின் வசூலை மையமாக வைத்து நான் படம் பண்ணுவது கிடையாது. பாக்ஸ் ஆபிஸில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. சரப்ஜித் படம் வெளிவந்த பிறகு பலரும் என்னை பாராட்டினார்கள். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த பாராட்டை என்னை இன்னும் வலிமைப்படுத்துகிறது. இது மிகவும் சென்சிட்டிவான படம், ரசிகர்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு வலு சேர்க்கும் என்று கூறியுள்ளார்.