'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
சந்தானம் ஹீரோவான பிறகு சூரிதான் முன்னணி காமெடியனாக இருந்து வருகிறார். இந்தநிலையில், வடிவேலுவும் களமிறங்கியிருக்கிறார். இந்த நேரத்தில் சிங்கமுத்து, சிங்கம்புலி, ஆடுகளம் முருகதாஸ், யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், சாமிநாதன், கிரேன் மனோகர், பவர்ஸ்டார், உள்பட பல காமெடியன்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, பவர்ஸ்டார், யோகிபாபு போன்றவர்கள் ஷோலோ காமெடியனாகவும் கலக்கி வருகின்றனர். ஆனால் கிரேன் மனோகருக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தும் ஷோலோ காமெடியனாக நடிக்க பயப்படுவதாக கூறுகிறார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவில் சாதாரண நடிகராக வந்து இப்போது பெயர் சொன்னால் தெரியும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். காமெடியனாகத்தான் பல படங்களில் நடித்துள்ளேன். தற்போது ஒன்பது டூ பத்து என்ற படத்தில் ஷோலோ காமெடியனாகவும் நடித்து வருகிறேன். இதைப்பார்த்து சிலர் சந்தானம், சூரி மாதிரி ஒரு காமெடி இலாகா வைத்து காமெடி ட்ரேக் பண்ண வேண்டியதானே என்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி செய்ய பயமாக உள்ளது. காரணம், அப்படி நான் செய்து அது ஒர்க்அவுட்டாக வில்லை என்றால் இருக்கிற மார்க்கெட்டும் சரிந்து விடும். அதனால் டைரக்டர்கள் கொடுக்கும் காமெடியை டெவலப் பண்ணி நடித்தாலே போதும் என்று நினைக்கிறேன் என்கிறார் கிரேன் மனோகர்.