ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு மாத விடுமுறைக்கு பின்னர் பாகுபலி படக்குழு அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் மீண்டும் தீவிரமாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ்,ரானா,அனுஷ்கா,தமன்னா உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். தற்போது போர் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெறுகின்றது. சண்டைக்காட்சிகளின் போது ஏற்பட்ட விபத்தில் ரானாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதனை ரானா மறுத்துள்ளார். படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து டுவிட்டரில் விளக்கமளித்துள்ள ரானா எலும்பு முறிவு போன்ற எவ்வித அசம்பாவிதங்களும் நிகழவில்லை சிறு காயம் மட்டுமே தனக்கு ஏற்பட்டதாக ரானா குறிப்பிட்டுள்ளார்