பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபகாலமாக கமர்ஷியல் படங்களை காட்டிலும் யதார்த்த படங்கள் தான் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறுகின்றன. இது நல்ல விஷயம் என்கிறார் அக்ஷ்ய் குமார். அக்ஷ்ய் குமார் நடிப்பில் தற்போது 'ஹவுஸ்புல்-3' படம் வெளிவர இருக்கிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் அக்ஷ்ய்.
அப்போது நிகழ்ச்சி ஒன்றில் அக்ஷ்ய் பேசியதாவது... ''யதார்த்தமான படங்களை ரசிகர்கள் வரவேற்பது மகிழ்ச்சி, இது ஒரு அருமையான விஷயம். நான் 'ஸ்பெஷல் 26' படத்தில் நடித்தேன். இது ரூ.70 முதல் 80 கோடி வரை வசூலித்தது. அதேப்போன்று 'பேபி' படம் ரூ.90 கோடி வசூலித்தது, ஏர்லிப்ட் படம் ரூ.125 கோடி வசூலித்தது. நீர்ஜா படமும் சூப்பர் ஹிட்டானது, நல்ல வசூல் செய்திருக்கிறது என்று சொன்னார்கள், ஆனால் எவ்வளவு என்று தெரியவில்லை. இந்தப்படங்கள் எல்லாமே யதார்த்த படங்கள் தான். இதை ரசிகர்கள் எல்லாம் மிகவும் விரும்பி பார்த்ததால் தான் ஹிட்டாக அமைந்தன என்று கூறியுள்ளார்.