இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பட்டாஸ் படப்புகழ் கல்யாண் ராம் இறுதியாக நடித்த ஷேர் எனும் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இதனால் தனது அடுத்த படத்தில் கவனமாக இருந்த கல்யாண் ராம் ஆக்ஷன் கதைகளுக்கு பெயர்போன இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்துள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று(மே 26) முதல் துவங்கியுள்ளது. ரூ 30 கோடி செலவில் உருவாகும் இப்படத்தை நாயகன் கல்யாண் ராம் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். 2015ல் இந்திய அழகி பட்டம் வென்ற அதிதி ஆர்யா இப்படத்தில் கல்யாண் ராமிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்