ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியிருக்கும் நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் நூறாவது படத்தில், தற்போது, நடித்து வருகிறார். இதையடுத்து, சிரஞ்சீவியின், 150வது படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படம், விஜய் நடித்த, கத்தி படத்தின் ரீ - மேக் என்பதால், தமிழில், கத்தி படத்தில் நடித்த சமந்தா, சிரஞ்சீவியை சந்தித்து, 'கத்தி தமிழ் படத்தில் நடித்த நான் தான் தெலுங்கிலும் நடிப்பேன்...' என்று அடம்பிடித்து, அவ்வாய்ப்பை கைப்பற்றி விட்டார். இதனால், அப்படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருந்த நயன்தாரா, சிரஞ்சீவி பட வாய்ப்பை இழந்து விட்டார். உன்னைப் பிடி, என்னைப் பிடி... உலகாத்தாள் தலையைப் பிடி!
— எலீசா