நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் |
கோலிசோடா விஜய் மில்டன் பத்து எண்றதுக்குள்ள படத்தை அடுத்து தற்போது இயக்கி வரும் படம் கடுகு. கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடிகை தேவயானியின் கணவரான டைரக்டர் இராஜகுமாரன் புலி வேஷம் போட்டு ஆடும் கேரக்டரும், பரத் கிராமத்து பாடி பில்டராகவும், விஜய்மில்டனின் தம்பி பாரத் இன்னொரு வேடத்திலும் நடிக்கிறார்கள். ஆக, மூன்று முக்கிய கதாபாத்திரங்களை மையப் படுத்தி இப்படம் உருவாகிறது.
மேலும், இப்படத்தில் டைட்டீல் ரோலில் நடிக்கும் இராஜகுமாரன் புலி வேஷம் போடுபவராக நடிப்பதால், அந்த கேரக்டரின் வறுமை நிலையை அழுத்தமாக பதிவு செய்துள்ளாராம் விஜய் மில்டன். அதன்காரணமாக, இராஜகுமாரன் சிரித்து நடிப்பது போன்று ஒரு காட்சிகூட படத்தில் இல்லையாம். அதோடு, படப்பிடிப்பு தளத்திலும் சிரிக்கவே கூடாது என்று அவருக்கு கண்டிசன் போட்டுள்ளாராம் விஜய் மில்டன். அதனால் படப்பிடிப்பு தளத்தில் அந்த புலி வேஷக்காரர் கெட்டப்புடன் யாரும் இல்லாத இடத்தில் தனிமையில் சோக மயமாய் அமர்ந்திருக்கிறார் இராஜகுமாரன்.