ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கோலிசோடா விஜய் மில்டன் பத்து எண்றதுக்குள்ள படத்தை அடுத்து தற்போது இயக்கி வரும் படம் கடுகு. கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடிகை தேவயானியின் கணவரான டைரக்டர் இராஜகுமாரன் புலி வேஷம் போட்டு ஆடும் கேரக்டரும், பரத் கிராமத்து பாடி பில்டராகவும், விஜய்மில்டனின் தம்பி பாரத் இன்னொரு வேடத்திலும் நடிக்கிறார்கள். ஆக, மூன்று முக்கிய கதாபாத்திரங்களை மையப் படுத்தி இப்படம் உருவாகிறது.
மேலும், இப்படத்தில் டைட்டீல் ரோலில் நடிக்கும் இராஜகுமாரன் புலி வேஷம் போடுபவராக நடிப்பதால், அந்த கேரக்டரின் வறுமை நிலையை அழுத்தமாக பதிவு செய்துள்ளாராம் விஜய் மில்டன். அதன்காரணமாக, இராஜகுமாரன் சிரித்து நடிப்பது போன்று ஒரு காட்சிகூட படத்தில் இல்லையாம். அதோடு, படப்பிடிப்பு தளத்திலும் சிரிக்கவே கூடாது என்று அவருக்கு கண்டிசன் போட்டுள்ளாராம் விஜய் மில்டன். அதனால் படப்பிடிப்பு தளத்தில் அந்த புலி வேஷக்காரர் கெட்டப்புடன் யாரும் இல்லாத இடத்தில் தனிமையில் சோக மயமாய் அமர்ந்திருக்கிறார் இராஜகுமாரன்.