ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய சினிமாவில் குறிப்பிட்டு சொல்லும்படியான இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு எப்போதும் இடம் உண்டு. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்த இசைஞானி இளையராஜா, அவ்வப்போது ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சிகளையும் நடத்துவார். சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக இப்போது ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் இளையராஜா. சென்னை, நேரு ஸ்டேடியத்தில் வருகிற ஜூன் 11ம் தேதி நடக்கும் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிரபல பாடகர்களும் கலந்து கொண்டு பாட உள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருமானத்தை நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட செலவுக்காக வழங்கப்பட இருக்கிறது. இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, டி.சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.