ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உள்ளம் உருகுதய்யா..., அமைதியான நதியினிலே ஓடம்..., எங்கே நிம்மதி..., இரண்டு மனம் வேண்டும்..., கண் போன போக்கிலே..., ஒளிமயமான எதிர்காலம்..., பொன் எழில் பூத்தது புது வானில்.... என காலத்தால் அழியாத பல ஆயிரம் பாடல்களை தந்தவர் டிஎம் சவுந்திரராஜன். தேன் கலந்த குரலால் தெவிட்டாத பாடல்கள் பல தந்த இவர் இந்த மண்ணை விட்டு மறைந்து ஆண்டுகள் மூன்றாகிவிட்டது. அவரைப்பற்றிய நினைவலைகளை நேற்று பகிர்ந்து இருந்தோம்.
இந்நிலையில் டி.எம்.எஸ்.ன் வாரிசுகளில் ஒருவரான மகன் பால்ராஜ் நம்மிடம் பேசும்போது கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு வைத்தார். அவர் பேசும்போது, என் அப்பா எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து வைத்துள்ளார். எங்களுக்கு என்று ஒன்றும் வேண்டாம். இருந்தாலும் இந்த அரசுக்கு ஒரு வேண்டுகோள், நாங்கள் தற்போது சென்னை, மந்தைவெளியில் மேற்கு சர்குலர் சாலையில் வசித்து வருகிறோம். இந்த சாலைக்கு என் அப்பாவின் பெயரான டிஎம்எஸ்.,-ஐ வைக்க வேண்டும் என்பதே எனது மற்றும் எங்களின் குடும்பத்தின் ஆசை என்று கூறினார்.
டிஎம்எஸ்., குடும்பத்தாரின் இந்த ஆசையை தமிழக அரசு ஏற்குமா.?