ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தி பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுக்க நிலவி வருகின்றன. அது பற்றி கேள்விகளும் ஆராய்ச்சிகளும் உலகெங்கும் தொடர்கின்றன. ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து படமெடுக்க இளைஞர்குழு ஒன்று புறப்படுகிறது. அவர்களுக்கு நேரும் அனுபவங்களை இதயத்தின் லப்படப் ஓசை எகிறும் அளவுக்குச் சொல்கிற படம்தான் மீராஜாக்கிரதை. இப்படத்தை ஆர்.ஜி.கேசவன் இயக்கியுள்ளார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ள இவர், சினிமா ஆர்வத்தால் உந்தப்பட்டு யாரிடமும் பணிபுரியாமலேயே இயக்குநர் ஆகியுள்ளார். இப்படத்தை ஒயிட் ஸ்கிரீன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.அந்தோனி எட்வர்டு தயாரித்துள்ளார்.
இப்படம் படம் பற்றி இயக்குநர் கேசவன் கூறியதாவது... ''கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிச்சேரி- மரக்காணம் சாலையில் ஓர் இடத்தில் மாய உருவம் ஒன்று தோன்றுகிறது. பலரும் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து மர்மமான சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன என்று இதைப்பற்றி ஏராளமான பத்திரிகைச் செய்திகள் வந்துள்ளன. தொலைக் காட்சிகளிலும் வந்துள்ளன. இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் கதாசிரியர் மகேஷ்வரன். இவர் இயக்குநர் வசந்தபாலனிடம் உதவியாளராகப் பணி புரிந்தவர்.
மீரா என்கிற பேயே எல்லாரையும் மிரட்டுகிறது. அந்த மீராவாக அழகி மோனிகா நடித்துள்ளார். சிலந்தி என்கிற படத்தின் மூலம் ஹாரர் வெற்றிப்பட ராசியும் இவருக்குண்டு. தேசிய விருது நடிகர் பாபிசிம்ஹா பிரதான வில்லனாக வந்து மிரட்டுகிறார். அவரது அனாயாச நடிப்பு அனைவரையும் கவரும். முழுக்க இரவில் நடக்கும் கதை என்பதால் பரபரப்புக்கு பஞ்ச மிருக்காது. கிராபிக்ஸ் கலக்கலும் உண்டு. பாண்டிச்சேரி, நாமக்கல், கிழக்கு கடற்கரை சாலை, ஓ எம்.ஆர் சாலை, கேளம்பாக்கம், திருக்கோவிலூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. காதல், பழிவாங்கல் ,நகைச்சுவை எல்லாம் கலந்த திகில் படமாக இப்படம் உருவாகியுள்ளது என்று உத்திரவாதம் தருகிறார் இயக்குநர் ஆர்.ஜி.கேசவன்.
மீரா ஜாக்கிரதை படம் மே 27ம் தேதி ரிலீஸாகிறது. ஜெனிசிஸ் ஸ்டுடியோஸ் இப்படத்தை வெளியிடுகிறது.