தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மரணம் இயற்கையானதல்ல என்கிற விஷயம் கிளியர் கட்டாக தெரிந்த பின்னும், இந்த இரண்டு மாதத்தில் அது தொடர்பான எந்தவித முனேற்றமும் இல்லை.. அவர் இறந்த சில நாட்களில் பரபரப்பாக இயங்கிய போலீஸ் கலாபவன் மணியின் நண்பர்கள் சிலரை விசாரித்தது. பின்னர் அவரது வீட்டு வேலையாட்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தது. ஆனால் அவர்களும் ஜாமீனில் வந்துவிட்டார்கள். மணியின் உடலில் கலந்திருந்த ஆல்கஹாலில் பூச்சி மருந்து கலந்திருந்ததாக போஸ்ட் மாடர்ம் ரிப்போர்ட் சொல்ல, ஒருகட்டத்தில் மணியின் மாமனார் பூச்சி மருந்து வாங்கினார் என்று கூட தகவல் கிடைத்தது..
ஆனால் அந்த ரூட்டிலும் மேற்கொண்டு விசாரணையை போலீசாரால் தொடரமுடியவில்லை. கலாபவன் மணியின் உடலில் விஷம் பாதிக்கப்பட்ட பகுதியின் சாம்பிள் ஒன்று ஐதராபாத் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டது.. ஆனாலும் இன்னும் கூட அந்த ரிசல்ட் வந்தபாடில்லை. ஒருகட்டத்தில் போலீஸார் இந்த வழக்கை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர் என கொந்தளித்தார் கலாபவன் மணியின் தம்பியான ராமகிருஷ்ணன்..
மேலும் இந்த வழக்கை விசாரிப்பதில் தீவிரம் காட்டவேண்டாம் என தங்கள் குடும்பத்திற்கு சிலர் மிரட்டல் விடுத்ததாகவும், போலீசாருக்கும் வேறு யாரோ பிரஷர் கொடுத்து வழக்கை முடக்கி வைத்துள்ளதாகவும் கலாபவன் மணியின் குடும்பத்தார் கருதுகின்றனர். இதனால் போலீஸாரின் மெத்தனப்போக்கை கண்டித்தும் வழக்கை தீவிரமாக்கி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் வரும் சனிக்கிழமை காலை 7மணி முதல் இரவு 7மணி வரை சாலக்குடியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்துள்ளார்கள். இதன் பின்னரும் போலீஸார் அலட்சியம் காட்டினால் போராட்டத்தை தீவிரமாக்கவும் முடிவு செய்துள்ளனராம் கலாபவன் மணியின் குடும்பத்தினர்.