தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2009ல் நடித்த நான் அவனில்லை-2வுக்கு பிறகு ஜீவன் நடித்த கிருஷ்ணலீலை படம் டிராப் ஆனது. அதன்பிறகு அவருக்கு புதிய படங்கள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். ஆனபோதும் 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிபர் படம் மூலம் மறுபடியும் சினிமாவில் பிரவேசித்தார் ஜீவன்.ஆனால் அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதையடுத்து ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜெயிக்கிற குதிரையில் நடித்து வருகிறார். அந்த படமும் பைனான்ஸ் பிரச்சினையில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தான் நடித்த ஹிட் படமான திருட்டு பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை சுசிகணேசன் இயக்குவதாக அறிந்த ஜீவன், அந்த வாய்ப்பு தனக்குத்தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாராம். ஆனால் அவர் எதிர்பார்த்த தற்கு மாறாக, அப்படத்தில் நடிக்க ஆர்யாவை தொடர்பு கொண்ட சுசிகணேசன், அவர் அந்த கதையில் நடிக்க மறுத் ததை அடுத்து இப்போது வேறு சில ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார். இதனால், திருட்டுபயலே ஒர்ஜினல் ஹீரோ நானிருக்க இவர் வேறு யார் யாரிடமே கால்சீட் கேட்கிறாரே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம் ஜீவன்.