கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
2009ல் நடித்த நான் அவனில்லை-2வுக்கு பிறகு ஜீவன் நடித்த கிருஷ்ணலீலை படம் டிராப் ஆனது. அதன்பிறகு அவருக்கு புதிய படங்கள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். ஆனபோதும் 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிபர் படம் மூலம் மறுபடியும் சினிமாவில் பிரவேசித்தார் ஜீவன்.ஆனால் அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதையடுத்து ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜெயிக்கிற குதிரையில் நடித்து வருகிறார். அந்த படமும் பைனான்ஸ் பிரச்சினையில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தான் நடித்த ஹிட் படமான திருட்டு பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை சுசிகணேசன் இயக்குவதாக அறிந்த ஜீவன், அந்த வாய்ப்பு தனக்குத்தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாராம். ஆனால் அவர் எதிர்பார்த்த தற்கு மாறாக, அப்படத்தில் நடிக்க ஆர்யாவை தொடர்பு கொண்ட சுசிகணேசன், அவர் அந்த கதையில் நடிக்க மறுத் ததை அடுத்து இப்போது வேறு சில ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார். இதனால், திருட்டுபயலே ஒர்ஜினல் ஹீரோ நானிருக்க இவர் வேறு யார் யாரிடமே கால்சீட் கேட்கிறாரே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம் ஜீவன்.