பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
2009ல் நடித்த நான் அவனில்லை-2வுக்கு பிறகு ஜீவன் நடித்த கிருஷ்ணலீலை படம் டிராப் ஆனது. அதன்பிறகு அவருக்கு புதிய படங்கள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். ஆனபோதும் 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிபர் படம் மூலம் மறுபடியும் சினிமாவில் பிரவேசித்தார் ஜீவன்.ஆனால் அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதையடுத்து ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜெயிக்கிற குதிரையில் நடித்து வருகிறார். அந்த படமும் பைனான்ஸ் பிரச்சினையில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தான் நடித்த ஹிட் படமான திருட்டு பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை சுசிகணேசன் இயக்குவதாக அறிந்த ஜீவன், அந்த வாய்ப்பு தனக்குத்தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாராம். ஆனால் அவர் எதிர்பார்த்த தற்கு மாறாக, அப்படத்தில் நடிக்க ஆர்யாவை தொடர்பு கொண்ட சுசிகணேசன், அவர் அந்த கதையில் நடிக்க மறுத் ததை அடுத்து இப்போது வேறு சில ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார். இதனால், திருட்டுபயலே ஒர்ஜினல் ஹீரோ நானிருக்க இவர் வேறு யார் யாரிடமே கால்சீட் கேட்கிறாரே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம் ஜீவன்.