ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான 'பிரேமம்' படத்தில் நடித்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான பாராட்டையும் புகழையும், அதன்மூலம் தொடர் வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள்.. அதில் குறிப்பாக இரண்டுபேர் நான்ஸ்டாப் கைதட்டலை அள்ளினார்கள்.. ஒருவர் படத்தில் நிவின் பாலியின் கல்லூரி லெக்சரராக நடித்து கலகலப்பூட்டிய நடிகர் வினய் போர்ட்.. இன்னொருவர் பி.டி.மாஸ்டராக நடித்த சௌபின் ஷாகீர். ஆனால் அடிப்படையில் இவர் டைரக்சன் டிபார்ட்மென்ட்டை சேர்ந்தவர். பாசில், சித்திக், ரபி மெக்கார்டின், அமல் நீரத் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த இவரை, திடீரென ஒரு நாள் 'அன்னயும் ரசூலும்' படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க படத்தின் இயக்குனர் ராஜீவ் ரவி அழைக்க, அப்போதிருந்து முழு நேர காமெடி நடிகராக மாறிவிட்டார்..
பிரேமம் இவரை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கவே, அடுத்து துள்ளார் சல்மானுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு 'சார்லி' படம் மூலம் கிடைத்தது. அதில் துல்கரின் நண்பனாக நடித்துக்கொண்டிருந்தபோதே துல்கரின் 'கலி' படத்திலும் அவருக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பு அடித்து.. மூன்றாவதாக சமீபத்தில் ரிலீஸான துல்கரின் கம்மட்டிப்பாடம்' படத்திலும் இடம்பிடித்தார் சௌபின் ஷாகீர். இது அவரை ஏற்கனவே அறிமுகப்படுத்திய ராஜீவ் ரவியின் படம் என்பது கூடுதல் தகவல்.. அடுத்ததாக தற்போது அமல் நீரைத் இயக்கத்தில் துல்கர் நடிக்கும் புதிய படத்திலும் துல்கருடன் இணைந்துள்ளார் சௌபின் ஷாகீர்.. ஒரு காமெடி நடிகரான சௌபின் ஷாகீர், குறுகிய காலத்திலேயே தொடர்ந்து துல்கர் சல்மானுடன் இணைந்து நடிப்பது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம் தான்.