கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
குடும்பம் குடும்பமாக வசிகரித்து தனது படங்களை விரும்பி பார்க்க வைப்பது ஒரு கலை என்றால், அனைத்து தர ரசிகர்களின் விருப்பமும் பூர்த்தி செய்யும் வகையில் படங்களை எடுப்பது மற்றொரு கலை. இவ்விரண்டு கலைகளிலும் கைதேர்ந்தவர் இயக்குனர் பி.வாசு. ரஜினிகாந்த், பிரபு, அஜித் என பல முன்னனி நட்சத்திரங்களுடன் பணியாற்றி பணக்காரன், சின்னதம்பி, சந்திரமுகி என பலதரப்பட்ட உணர்ப்பூர்வமான திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் பி.வாசு.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் இவர். சமீப காலங்களில் கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடிப்பில் அப்தரக்ஷகா, உபேந்திரா நடிப்பில் அரக்ஷகா, ரவிச்சந்திரன் நடிப்பில் திர்ஷ்யா, சிவராஜ் குமார் நடிப்பில் சிவலிங்கா என இவர் இயக்கிய அனைத்து படங்களும் அமோக வெற்றி பெற்று வசுலில் புரட்சி செய்தன. தற்போது மீண்டும் தமிழ் படம் இயக்க ஆயுத்தமாகியுள்ள இயக்குனர் பி.வாசு தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்.