ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
நடிகைகளையும், கிசுகிசுக்களையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள். பொதுவாக கிசுகிசுக்கள் என்பதை பத்திரிகையாளர்கள் மட்டுமே உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதில் சில சமயம் உண்மையும் இருக்கும், சில சமயம் பொய்யும் இருக்கும். ஆனால், பல காதல் கிசுகிசுக்கள் கடைசியில் உண்மையாகவே மாறியிருக்கின்றன. சில காதல்கள் அந்த கிசுகிசுக்களால் மட்டுமே உருப் பெற்றிருக்கின்றன. இப்படி கிசுகிசுக்களுக்கென தனி மரியாதை (?) இருந்து வந்தது. இந்த மரியாதையை இப்போது சில நடிகர், நடிகைகள் கெடுக்க ஆரம்பித்துவிட்டார்களோ என யோசிக்கத் தோன்றுகிறது.
தாங்களாகவே கிசுகிசுக்களை உருவாக்கி, அதை தங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் மூலம் பரவவிடும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நடிகர்களில் சிம்பு இந்த ரகம் தான். நடிகைகளில் சமந்த உருவாகி வருவதாகச் சொல்கிறார்கள். சமீபத்திய அவருடைய காதல், கல்யாணம் ஆகிய செய்திகள் அனைத்துமே சமந்தாவே வேண்டுமென்றே கிளப்பி விட்ட சர்ச்சைகள் என்கிறார்கள். பைசா செலவில்லாமல் அப்படி சர்ச்சைகளைக் கிளப்பி விட்டால் மீடியாக்களில் சில நாட்கள் வலம் வரலாம் என யாரோ அவருக்கு யோசனை சொல்லி செயல்படுத்தியிருக்கிறார்கள்.