'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
நடிகைகளையும், கிசுகிசுக்களையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள். பொதுவாக கிசுகிசுக்கள் என்பதை பத்திரிகையாளர்கள் மட்டுமே உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதில் சில சமயம் உண்மையும் இருக்கும், சில சமயம் பொய்யும் இருக்கும். ஆனால், பல காதல் கிசுகிசுக்கள் கடைசியில் உண்மையாகவே மாறியிருக்கின்றன. சில காதல்கள் அந்த கிசுகிசுக்களால் மட்டுமே உருப் பெற்றிருக்கின்றன. இப்படி கிசுகிசுக்களுக்கென தனி மரியாதை (?) இருந்து வந்தது. இந்த மரியாதையை இப்போது சில நடிகர், நடிகைகள் கெடுக்க ஆரம்பித்துவிட்டார்களோ என யோசிக்கத் தோன்றுகிறது.
தாங்களாகவே கிசுகிசுக்களை உருவாக்கி, அதை தங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் மூலம் பரவவிடும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நடிகர்களில் சிம்பு இந்த ரகம் தான். நடிகைகளில் சமந்த உருவாகி வருவதாகச் சொல்கிறார்கள். சமீபத்திய அவருடைய காதல், கல்யாணம் ஆகிய செய்திகள் அனைத்துமே சமந்தாவே வேண்டுமென்றே கிளப்பி விட்ட சர்ச்சைகள் என்கிறார்கள். பைசா செலவில்லாமல் அப்படி சர்ச்சைகளைக் கிளப்பி விட்டால் மீடியாக்களில் சில நாட்கள் வலம் வரலாம் என யாரோ அவருக்கு யோசனை சொல்லி செயல்படுத்தியிருக்கிறார்கள்.