‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'வெள்ளக்காரதுரை' படத்திற்கு பிறகு எழில் இயக்கி உள்ள படம் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்'. சி.சத்யா இசை அமைத்துள்ளார், விஷ்ணு விஷால் ஹீரோ. இந்த படத்தின் அபூர்வ ஒற்றுமை என்னவென்றால் மூன்று பேருக்குமே இது 10வது படம். நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் இந்த தகவலை வெளியிட்டனர். நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடித்துள்ளார், சூரி, ரவிமரியா காமெடி செய்கிறார்கள்.
எழில் பேசியதாவது: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனக்கும் நாயகன் விஷ்ணு விஷாலுக்கும், இசையமைப்பாளர் சத்யாவிற்கும் 10வது திரைப்படம். நான் இப்படத்தின் கதையை நாயகன் விஷ்ணு விஷாலிடம் கூறியதும், கதை பிடித்த காரணத்தால் தானே தயாரிப்பதாக கூறினார். அவருடைய தயாரிப்பு ஐடியாக்கள் மிகவும் புதிதாக இருந்தது. விஷ்ணு விஷாலின் தனிச்சிறப்பு அவருடைய ப்ரோமோஷன் ஐடியாக்கள். இன்றைய காலகட்டத்தில் படத்தை தயாரிப்பதை விட அதை விளம்பரபடுத்துவதுதான் கடினமான ஒன்று. படத்தின் நாயகியான நிக்கி கல்ராணி கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது- படத்தில் அவர் பெண் போலீசாக நடித்து சண்டை காட்சிகளில்கலக்கியுள்ளார்- என்றார்.
விஷ்ணு விஷால் பேசியதாவது: நீர்ப்பறவை படத்திற்கு பின் நான் படங்களை தேர்வு செய்துதான் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல் இதுவரை எல்லா படங்களையும் தேர்வு செய்துதான் நடித்து வருகிறேன். இதுவும் நான் யோசித்து தேர்வு செய்து நடிக்கும் கதைதான் என்றார்.