ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
'வெள்ளக்காரதுரை' படத்திற்கு பிறகு எழில் இயக்கி உள்ள படம் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்'. சி.சத்யா இசை அமைத்துள்ளார், விஷ்ணு விஷால் ஹீரோ. இந்த படத்தின் அபூர்வ ஒற்றுமை என்னவென்றால் மூன்று பேருக்குமே இது 10வது படம். நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் இந்த தகவலை வெளியிட்டனர். நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடித்துள்ளார், சூரி, ரவிமரியா காமெடி செய்கிறார்கள்.
எழில் பேசியதாவது: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனக்கும் நாயகன் விஷ்ணு விஷாலுக்கும், இசையமைப்பாளர் சத்யாவிற்கும் 10வது திரைப்படம். நான் இப்படத்தின் கதையை நாயகன் விஷ்ணு விஷாலிடம் கூறியதும், கதை பிடித்த காரணத்தால் தானே தயாரிப்பதாக கூறினார். அவருடைய தயாரிப்பு ஐடியாக்கள் மிகவும் புதிதாக இருந்தது. விஷ்ணு விஷாலின் தனிச்சிறப்பு அவருடைய ப்ரோமோஷன் ஐடியாக்கள். இன்றைய காலகட்டத்தில் படத்தை தயாரிப்பதை விட அதை விளம்பரபடுத்துவதுதான் கடினமான ஒன்று. படத்தின் நாயகியான நிக்கி கல்ராணி கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது- படத்தில் அவர் பெண் போலீசாக நடித்து சண்டை காட்சிகளில்கலக்கியுள்ளார்- என்றார்.
விஷ்ணு விஷால் பேசியதாவது: நீர்ப்பறவை படத்திற்கு பின் நான் படங்களை தேர்வு செய்துதான் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல் இதுவரை எல்லா படங்களையும் தேர்வு செய்துதான் நடித்து வருகிறேன். இதுவும் நான் யோசித்து தேர்வு செய்து நடிக்கும் கதைதான் என்றார்.