பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவிருக்கும் அவரது 150வது திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஜுன் 6ல் துவங்கவுள்ளன. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் 'கத்திலாண்டோடு' என்ற பெயரில் சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகவுள்ளது. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் இயக்குனர் சங்கரின் எந்திரன் உள்ளிட பல வெற்றி படங்களில் பணியாற்றிய ரத்னவேலு தெலுங்கிலும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அண்மையில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பிரம்மோற்சவம் படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தான். அவரே தற்போது சிரஞ்சீவியின் 150வது படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். 2017 ஜனவரியில் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது