ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவில் இருந்து வந்த நயன்தாரா, அசின், கேபிகா, மீரா ஜாஸ்மின் போன்ற நடிகைகள் தங்களது பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை இணைத்துக் கொள்ளவில்லை. ஆனால், லட்சுமிமேனனைப் போன்ற சில நடிகைகள் மேனனை பெயருடன் இணைத்துக்கொண்டது போன்று நவ்யா நாயரைத் தொடர்ந்து அருந்ததி என்கிற நடிகையும் நாயரை தனது பெயருடன் சேர்த்துக்கொண்டார்.
இதுபற்றி அவரைக்கேட்டால், ஜாதி பெயரை எனது பெய ருடன் இணைக்க வேண்டும் என்று நான் விரும்பியதில்லை. ஆனால் நான் வருவதற்கு முன்பே தமிழில் அருந்ததி என்ற பெயரில் நடிகை இருப்பதால், ஒரே பெயரில் இரண்டு நடிகை கள் இருந்ததால் குழப்பம் வரும் என்பதால், எனது பெயரில் நாயரை சேர்த்துக்கொண்டேன் என்கிறார்.
மேலும், தற்போது விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் நடித்துள்ள அருந்ததி நாயர், வின்சென்ட் செல்வா இயக்கி வரும் சிவனான்டியும் விருமான்டியும் -என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களிலுமே சிங்கிள் ஹீரோயினி வேடம் என்பதால், இந்த படங்கள் தமிழில் தனக்கு நல்லதொரு ஆரம்பமாக அமையும் என்று பெரிய நம்பிக்கை யுடன் இருக்கும் அருந்ததி நாயர், அடுத்து புதிய படங்கள் கமிட்டானதும் கோடம்பாக்கத்தில் முகாமிடப்போகிறாராம்.