ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படம் அந்தா, இந்தா என்று ஒருவழியாக இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு தற்போது ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. வருகிற மே 27ம் தேதி படம் வெளியாகிறது. இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிம்பு. அப்போது, பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிம்பு பதிலளித்தார்.
அவர் பேசியதாவது... ''இது நம்ம ஆளு படம், சிம்புவின் வழக்கமான படம் போன்று இருக்காது. சண்டைக்காட்சிகள் இல்லாமல் நான் நடித்த முதல்படம் இது. இந்தப்படம் பார்க்கும் இளைஞர்கள் எல்லோரும் சிம்பு போன்றும், பெண்கள் எல்லோரும் நயன்தாரா போன்றும் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். நயன்தாரா இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். எதிர்காலத்தில் நல்ல கதைகள் அமைந்தால் நயன்தாராவுடன் தொடர்ந்து நடிப்பேன் என்றவரிடத்தில் உங்களுக்கு எப்போது திருமணம் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த சிம்பு, இதற்கான பதிலை ஆண்டவன் பார்த்துக் கொள்வார். நம் கையில் ஒன்றுமில்லை, நடக்க வேண்டிய நேரத்தில் திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.