மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 'பட்டத்துயானை' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். இதில் விஷால் ஹீரோவாக நடித்தார். இந்தப் படத்தை குளோபல் இண்போடைன்மெண்ட சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இந்த படத்தின்போது அர்ஜுன், தன் மகளை சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தினார். ஆனால் 'பட்டத்துயானை' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஐஸ்வர்யாவுக்கு அடுத்த வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
ஆனாலும் ஆக்ஷன் கிங் மனம் தளர்ந்து விடவில்லை. மகளுக்கு ஏற்ற காதல் கதை ஒன்றை எழுதி அதை தானே தயாரித்து, இயக்குவதென முடிவு செய்தார். அதன்படி 'காதலின் பொன் வீதியில்' என்ற தலைப்பில் தமிழிலும், 'பிரேம பரஹா' என்ற பெயரில் கன்னடத்திலும் தற்போது படத்தை தயாரித்து இயக்குகிறார். இதில் கன்னடத்தில் 'பிக்பாஸ்' என்ற படத்தில் நடித்த சந்தன் ஹீரோ.
சென்னையில் மகளை அறிமுகப்படுத்தியது ராசியில்லாமல் போனதால் இந்த முறை கன்னடத்தில் மகளை அறிமுகப்படுத்தினார். பெங்களூருவிலுள்ள நட்சத்திர ஓட்லில் இந்த அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கன்னட சூப்பர் ஸ்டார் மறைந்த ராஜ்குமாரின் மனைவி டாக்டர் பர்வதம் அம்மாள், நடிகர்கள் ராஜேஷ், அம்ரிஷ், சிவராஜ்குமர், அசோக் செனாய், ராஜேந்திரசிங் பாபு, நடிகைகள் சரோஜாதேவி, பாரதி, தாரா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.