ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தனி ஒருவராக திருட்டு விசிடி வேட்டை நடத்தினார். தற்போது நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து திருட்டு விசிடி வேட்டை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் அவர்களின் புகாரின் பேரில் சென்னையில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடையை போலீசார் சோதனை நடத்தி அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் மதுரையில் உள்ள பாலரங்கபுரம் என்னும் பகுதியில் உள்ள குடோனில் திருட்டு விசிடி தயாரித்த கும்பலை போலீசார் பிடித்தனர் அத்துடன் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள கணினி இயந்திரங்களும் மற்றும் புதிய படங்களை பதிவு செய்துள்ள குறும்தகுடுகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் ராம்சந்த லால் சேட்டு என்பவருடைய குடோனில் 20 பேர் திருட்டு டி.வி.டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கே இருந்து தர்மபுரி, சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பத்து மாவட்டத்துக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதை நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் தலைமையில் பொதுசெயலாளர் விஷால் அவர்களின் புகாரின் அடிப்படையில் அங்குள்ள திருட்டு டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் கிச்சாபாளையம் பகுதில் இயங்கி வந்த திருட்டு டி.வி.டி தயாரிக்கும் இடமும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.