ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1988ம் ஆண்டு வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய 'செந்தூரப்பூவே' படத்தை இயக்கியவர் பி.ஆர்.தேவராஜ். விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடித்திருந்தனர். விஜயகாந்திற்கு ஒரு திருப்பத்தையும், ராம்கி, நிரோஷாவுக்கு காதலையும் கொடுத்த படம். அதன் பிறகு தேவராஜ் 'இளையராகம்' என்ற படத்தை இயக்கினார். அது தோல்வி அடையவே சினிமாவிலிருந்து விலகி தெலுங்கு டி.வி தொடர்களை இயக்கி வந்தார்.
சென்னை தி.நகரில் வசித்து வந்த தேவராஜ், தனது நண்பர்களுடன் கோவையிலிருந்து ஜதராபத்திற்கு நேற்று முன்தினம் காரில் சென்றார். கார் கர்னூல் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து சாலையில் உருண்டது. இதில் காரில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலன் இன்றி தேவராஜ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. நண்பர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேவராஜ் உடல் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. தேவராஜுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.