மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரம்மி படத்தில் விஜயசேதுபதியுடன் நடித்த கூடமேல கூட வச்சி -என்ற ஒரே பாடல் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு அவர் நடித்த பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற படங்கள் வெற்றி பெறாதபோதும், காக்கா முட்டை படத்தின் வெற்றி ஐஸ்வர்யாவை பிரபல நடிகையாக்கியது. ஆனபோதும் அவருக்கு தமிழில் முன் னணி நடிகர்களின் படவாய்ப்புகள் இப்போதுவரை கிடைக்க வில்லை. மூன்றாம் தட்டு ஹீரோக்களுடன்தான் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், காக்கா முட்டை படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து அசந்து போன இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் தான் நடிக்கும் டாடி இந்திப்படத்தில் ஐஸ்வர்யாவை நாயகியாக்கினார். அதற்கு முன்புவரை தமிழில் தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யாவின் அடுத்த இலக்கு தனது தாய்மொழியான தெலுங்கில் நடிக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் இந்தி சினிமா வாய்ப்பே தேடி வந்ததால் செம உற் சாகத்தில் அப்படத்தில் கமிட்டான அவர், தற்போது மும்பையில் முகாமிட்டு டாடி படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், தமிழில் குறைவான சம்பளமே வாங்கி வந்த ஐஸ்வர்யா ராஜேசுக்கு இந்தி படத்தில் நடிக்க 70 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதோடு, மானாட மயிலாட டான்சரான அவருக்கு தமிழ்ப்படங்களில் நடனமாட போதுமான வாய்ப்புகள் கிடைக்காதபோதும், டாடி இந்தி படத்தில் கவர்ச்சி உடைதரித்து அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய வாய்ப்பும் கிடைத் துள்ளதாம். அதனால் இந்த படம் இந்தியில் எனக்கு பெரிய வரவேற்பை கொடுக்கும். அப்படி கொடுத்தால் இந்திய அளவில் நான் பேசப்படும் நடிகையாகி விடுவேன் என்று தனது கோலிவுட் நண்பர்களிடம் சொல்லி உற்சாக முழக்கமிட்டு வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.