ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன். இவர் தனது சொந்த தயாரிப்பில் உருவான 'பொன்மாலைபொழுது' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு 'யாமிருக்க பயமே' படத்தில் நடித்தார். தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஆதவ் இப்போது 'பகல்' என்ற படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அருந்ததி நாயர் நடிக்கிறார். சேரன் மற்றும் எழிலிடம் உதவியாளராக இருந்த பாரதி இயக்குகிறார். ஜோஸ்வா ஸ்ரீதர் இசை அமைக்கிறார். பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இது மதுரையை கதை களமாக கொண்ட காதல் ஆக்ஷன் கதை. சென்னையில் பிறந்து வளர்ந்த ஆதவிற்கு மதுரை பேச்சு பாணியும் மதுரை இளைஞர்களின் மேனரிசமும் தெரியாது என்பதால் பத்து நாட்கள் மதுரையில் கைலியுடன் சுற்றித் திரிந்து பயிற்சி எடுத்திருக்கிறார் சைக்கிளில் அலைந்திருக்கிறார். பத்து நாளில் மதுரை இளைஞனாகவே மாறிய பிறகு படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இந்தப் படம் தனக்கு நல்ல இடத்தை பெற்றுத் தரும் என்று நம்புகிறார் ஆதவ்.