பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்சாரதி அமெச்சூர் ஆர்ட்டிஸ் என்ற பெயரில் நாடக குழு தொடங்கி ஏராளமான நாடகங்களை நடத்தி உள்ளார். சிவாஜி, ஜெயலலிதா, அவரது அம்மா சந்தியா உள்ளிட்ட பலர் அவரது நாடகங்களில் நடித்துள்ளனர். சினிமாவில் நடித்தாலும் தந்தை வழியில் ஒய்.ஜி.மகேந்திரன் தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வருகிறார்.
அவரது மகள் மதுவந்தி அருண் தாத்தா வழியிலும், அப்பா வழியிலும் நாடக கம்பெனி தொடங்கி 'சிவசம்போ', 'பெருமாளே' போன்ற நாடகங்களை இந்தியாவிலும், வெளி நாட்டிலும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரே இயக்கவும், நடிக்கவும் செய்கிறார். தற்போது 'இ.வா.க' என்ற நாடகத்தை நடத்தி வருகிறார். அதோடு மயிலாப்பூரில் ஒரு கல்வி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலிலும் குதித்து விட்டார்.
மதுவந்தி அருணின் அடுத்த அவதாரம் சினிமா. ரஜினி நடித்த 'முத்து', 'கமல்' நடித்த ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க கேட்டபோது மறுத்த ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தினர் இப்போது சினிமாவில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்கள். இவரின் 'பெருமாள்' நாடகத்தை பார்த்த இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதி நடிக்கும் 'தர்மதுரை' படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்து விட்டார். அடுத்து ஆர்யா நடிப்பில் மஞ்சப்பை ராகவன் இயக்கும் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நல்ல வேடங்கள் அமைந்தால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க மதுவந்தி அருண் முடிவு செய்திருக்கிறார்.