தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'அட்டகத்தி' படத்தை யதார்த்த்துடன் வித்தியாசமாகக் கொடுத்து யார் இந்தப் படத்தின் இயக்குனர் என கேட்க வைத்தவர் பா.ரஞ்சித். அடுத்து இயக்கிய 'மெட்ராஸ்' படத்திலேயே தான் யார் என்பதைப் புரிய வைத்தார். துவண்டு கிடந்த கார்த்தியின் மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்தினார். இந்தப் படத்தின் வெற்றி ரஞ்சித்தை ரஜினிகாந்திடம் கொண்டு போய்ச் சேர்த்தது. இந்தக் கூட்டணியின் 'கபாலி' படம் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டு வருகிறது. இந்தப் படம் வெளிவந்த பிறகு பா.ரஞ்சித் ஸ்டார் இயக்குனர்களின் பட்டியலில் நிச்சயம் சேர்ந்துவிடுவார் என்று தமிழ்த் திரையுலகமே நம்பிக் கொண்டிருக்கிறது.
'அட்டகத்தி' படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்தான் வெளியிட்டது. அந்தப் படத்தை வெளியிடும் போதே பா.ரஞ்சித்தை அவர்களின் இரண்டு படத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தையும் போட்டார்கள். அதில் ஒன்றாக 'மெட்ராஸ்' வெளிவந்தது. அடுத்து சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தைத்தான் ரஞ்சித் இயக்குவதாக இருந்தது. அதற்குள் ரஜினிகாந்த் ரஞ்சித்தை அழைத்ததால் அதற்குப் பின் தங்களது தயாரிப்பில் படம் பண்ண வேண்டும் என்ற தாராள மனதுடன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் விட்டுக் கொடுத்தது.
அதன்படி 'கபாலி' வெளியீட்டிற்குப் பின் சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தைத்தான் பா.ரஞ்சித் இயக்க உள்ளார். '24' படமும் வசூலில் எந்த சாதனையையும் படைக்காததால் பா.ரஞ்சித்திடம் தனக்கு திருப்புமுனையைத் தரும்படியான கதையை எழுதுமாறு சூர்யா கேட்டுக் கொண்டுள்ளாராம். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்குமா அல்லது சூர்யாவின் சொந்தப் பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்குமா என்பது அறிவிப்பு வரும் போது தெரிய வரும்.