ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டுவிட்டரில் விஐபிக்கள் பற்றிய சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் டைரக்டர் ராம்கோபால் வர்மா. ஏற்கனவே இந்திய அளவிலான சினிமா பிரபலங்களான அமிதாப்பச்சன், கமல், ஸ்ரீதேவி ஆகியோரைப்பற்றி கருத்து வெளியிட்ட அவர், சமீபத்தில் ரஜினியையும் சந்தன கடத்தல் வீரப்பன் கடத்த திட்டமிட்டிருந்ததாக ஒரு புதிய பரபரப்பு செய்தியை வெளியிட்டார். ஆனால் அவரது கருத்துக்கு மற்றவர்களைப்போன்று ரஜினியும் எந்தவித ரியாக்சனும் காட்டவில்லை.
இந்த நிலையில், சந்தன கடத்தல் வீரப்பனை பற்றிய கதையை கன்னடத்தில் கில்லிங் வீரப்பன் -என்ற பெயரில் இயக்கி வெளியிட்ட அவர், அந்த படத்தை தற்போது தமிழில் வில்லாதி வில்லன் வீரப்பன் -என்ற பெயரில் டப் செய்து ஜூன் 3-ந்தேதி வெளியிடுகிறார். அதற்காக நேற்று சென்னையில் மீடியாக்களை சந்தித்தார் ராம் கோபால்வர்மா.
அப்போது அவர் பேசும்போது, கொள்ளையன் வீரப்பனின் வாழ்க்கையைப் பின் னணியும், வீரப்பனை வீழ்த்த போலீசார் நடத்திய ஆபரேஷன் குக்கூன் பற்றிய சம்பவங்கள் அடிப்படையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மூலம் அவர் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டு பிடிக்க போலீசார் எடுத்த நடவடிக்கைகளுமே இந்த படம்.
மேலும், வீரப்பன் குறித்த படங்கள் ஏற்கனவே வந்திருந்த போதும், நான் தனிப்பட்ட முறையில் சேகரித்த தகவல்களை வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். அந்த வகையில், வீரப்பனால் கொல்லப்பட்ட 97 போலீசார், 900 யானைகள், அவனை பிடிக்க அரசு செலவு செய்த 734 கோடி செலவு செய்த விசயங்கள் என இதுவரை சொல்லப்படாத விசயங்களை நான் சொல்லியிருக்கிறேன் என்றார்.
அதையடுத்து, வீரப்பன் சம்பந்தப்பட்ட இந்த கதையில் ரஜினியை பயன்படுத்தியது உங்களது பப்ளிசிட்டி ஸ்டன்டுதானே? என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, நான் தீவிரமான ரஜினி ரசிகன். அவரது ரசிகன் என்பதினாலேயே சென்னை வந்திருக்கிறேன்.
மேலும், வீரப்பன் பற்றிய செய்திகளை நான் அவன் வாழ்ந்த காட்டுப்பகுதி மக்களை சந்தித்து சேகரித்த போதுதான், கன்னட நடிகர் ராஜ்குமாரை அடுத்து ரஜினிகாந்தையும் அவன் கடத்த திட்டமிட்டு வைத்திருந்ததாக சொன்னார்கள். அவர்கள் சொல்லித்தான் அந்த திடுக்கிடும் செய்தியே எனக்கு தெரியும். அதைத்தான் நான் எனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தேன். இதை எனது படத்தின் பப்ளிசிட்டிக்காக நான் செய்யவில்லை. நான் கேள்விப்பட்ட ஒரு விசயத்தை மக்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
அதோடு, நான் ஒரு படைப்பாளி. என் மீது மற்றவர்களின் கவனம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் நான் பகிர்ந்து கொள்ளும் சில கருத்துக்களுக்கு மக்களும் பதில் கொடுப்ப தால் அது பெரிய விசயமாகி விடுகிறது என்றார்.