மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அட்லி இயக்கத்தில் நடித்த ராஜாராணிக்குப் பிறகு ஆர்யா நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. சில படங்களில் சந்தானத்துடன்கூட்டு சேர்ந்து நடித்த வர், சில படங்களில் ஆக்சன் கதைகளிலும் நடித்தார். ஆனால் எந்த பக்கம் திரும்பினாலும் அவருக்கு தோல்வி முகமாகவே அமைந்தது. அதனால் மார்க் கெட்டை தக்க வைத்துக்கொள்வதற்காக வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தை தயாரித்து நடித்தார். ஆனால் அந்த படமும் கைகொடுக்க வில்லை. இதனால் மனதளவில் சேர்ந்துபோய் விட்டார் ஆர்யா. குறிப்பாக, எப்போதுமே ஜாலியாக காணப்படும் அவரது முகத்தில் தோல்விகள் காரணமாக சோகம் குடிகொண்டது.
இந்த நிலையில்தான் இனிமேல் காதல், காமெடி என்பதில் இருந்து விடுபட்டு மாறுபட்ட கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறார் ஆர்யா. அந்த வகையில், தற்போது மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் நடித்து வரும் கடம்பன் படத்தை எப்படியும் ஹிட் படமாக கொடுத்து மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்று மெனக்கெடுகிறார். அதனால், இதுவரை ஜாலியான கதைகளில் ரிஸ்க் எடுக்காமல் நடித்துவந்த ஆர்யா, இந்த படத்துக்காக முதன்முதலாக தனது உடலை வருத்தி கட்டுக்கோப்பாக மாற்றிக்கொண்டிருக்கிறார். இதற்காக ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதோடு, தனது விருப்ப உணவுகளை ஏறக்கட்டி விட்டு, மருந்து சாப்பிடுவது போன்று சில உணவுகளையே எடுத்துக்கொண்டு வருகிறாராம் ஆர்யா. இந்த கடம்பன் படத்தில் நடித்து முடிக்கிறவரை இதே உடம்பை பராமரிக்கப்போகிறாராம்.