டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நயன்தாரா தமிழில் அறிமுகமான ஐயா படத்தில் கிராமத்து பெண்ணாகத்தான் நடித்தார். அப்படம் முழுக்க பாவாடை தாவணி கெட்டப்பில் பட்டாம் பூச்சியாய் சிறகடித்து இளவட்ட ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டார். ஆனபோதும் அதன் பிறகு பெரும்பாலான படங்களில் மாடர்ன் கெட்டப்பில் நடித்த நயன்தாரா இடையிடையே தனக்கு பிடித்தமான கிராமத்து கதாபாத்திரங்களில் பாவாடை தாவணி கெட்டப்பில் தோன்றி வருகிறார்.
அந்த வகையில், உதயநிதியுடன் நடித்த இது கதிர்வேலன் காதல் படத்திலும் அதே காஸ்டியூமில் நடித்த நயன்தாரா, இப்போது ஜீவாவுடன் நடித்துள்ள திருநாள் படத்தில் முழுக்க முழுக்க பாவாடை தாவணி அணிந்துதான் நடித்துள்ளார். அதோடு, வயல்வெளிகளில் அவர் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். அதனால் திருநாள் படத்தில் தனது கேரக்டர் மட்டுமின்றி, இயற்கை அழகையும் ரசித்து ரசித்து நடித்துள்ள நயன்தாரா, இந்த படத்தின் எனது கேரக்டரும், காஸ்டியூமும் என்னை ரொம்ப இளமையாக்கி யுள்ளது என்று தான் நடித்த காட்சிகளைப்பார்த்து சொல்லி குதூகலித்தாராம்.