விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தெனாலிராமன், எலி படங்களுக்கு பிறகு தன்னை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வராததால் மறுபடியும் காமெடியனாகியிருக்கிறார் வடிவேலு. விஷால் நடிக்கும் கத்திச்சண்டை படத்தில் இருந்து தனது காமெடி தர்பாரை மீண்டும் தொடங்கும் வடிவேலு, அதற்கடுத்தபடியாக இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆக, இனிமேல் காமெடியனாக நடித்துக்கொண்டே இடையிடையே ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிப்பாராம்.
இந்த நிலையில், வடிவேலுவை காமெடியனாக நடிக்க வைக்க மேலும் சில இயக்குனர்களும் தொடர்பு கொண்டனர். ஆனால், அதற்கு அவர் சொன்ன பதில் அவர்களுக்கு ஷாக் ஆகி விட்டதாம். அதாவது, நான் காமெடியனாக நடித்தாலும், இன்னொரு ஹீரோ போல்தான் படம் முழுக்க ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பேன். அவர்கள் ரொமான்ஸ் செய்தால் நான் காமெடி செய்வேன். ஆனால் கதையோடு நானும் பயணிப்பேன். இந்த அடிப்படையில்தான் படங்களில் நடிக்கப்போகிறேன். அதனால் முன்பு மாதிரி காமெடி ட்ரேக்கில் நடிப்பேன் என்று நினைத்து யாரும் வரவேண்டாம் என்று திட்டவட்டமாக கூறுகிறாராம் வடிவேலு.