பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மாஜி ஹீரோயின்களான ராதிகா, ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, தேவயானி, சுலக்சனா, சுதாசந்திரன் உள்ளிட்ட பல நடிகைகள் சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் மறுபிரவேசம் செய்தனர். அதேபோல் ராதா, பூர்ணிமா பாக்யராஜ், நமீதா, சங்கீதா, பிரியாமணி உள்ளிட்ட சில நடிகைகள் சேனல்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இப்படி படவாய்ப்பு கள் குறைகிறபோது நடிகைகள் சின்னத்திரைக்கு வந்து தங்களை பிசியாக்கிக் கொள்கின்றனர்.
மேலும், ஏற்கனவே கோடீஸ்வரன் உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களில் சரத்குமார், சூர்யா போன்ற நடிகர்கள் பங்கேற்று வந்த நிலையில், விரைவில் அரவிந்த்சாமியும் ஒரு நிகழ்ச்சியை நடத்தப்போகிறார். இந்த நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, ஸ்ரீனிவாஸ், சித்ரா, மால்குடி சுபா ஆகியோர் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வி-வாய்ஸ் என்ற இளம் பாடகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஆண்ட்ரியாவும் நடுவராக பங்கேற்கிறார். நடிகை மட்டுமின்றி அவர் ஒரு பின்னணி பாடகி என்பதால் இந்த நிகழ்ச்சியில் நீதிபதியாக இருந்து சிறந்த பாடகர் பாடகிகளை செலக்ட் பண்ணுகிறாராம். அவருடன் பாடகர்கள் பிரசன்னா, நரேஷ் அய்யர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களாம்.